பேர்சிவல் ஆக்லண்ட் டைக் “வடக்கின் ராஜா” | ஆங்கிலத்தில் : பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

Thursday 8 June 2023
00:00
00:00

இலங்கையின் வட மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் அயலிடப் பிரதிநிதி  (PROCONSUL) என்ற பதவியில் (பின்னர் அரசாங்க அதிபர் பதவி) பேர்சிவல் ஆக்லண்ட் டைக் பணியாற்றினார். இவரே வடக்கின் ராஜா என்ற புகழ் பெற்ற மனிதர் (RAJA OF THE NORTH) யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடபகுதியிலும் தமிழர்களிடையே டைக்  மரபுக் கதை நாயகன் போன்று வாய்மொழி மரபுகளால் வியந்து போற்றப்படும் ஒருவராக  இருந்துள்ளார். தலைமுறை தலைமுறையாக யாழ்ப்பாணத்தவர் மத்தியில் டைக் பற்றிய கதைகள் பரவலாகப்  பேசப்பட்டுவந்துள்ளன. இளைய தலைமுறையினர் அவர் பற்றிய துணுக்குகளையும் சாசகச் செயல்களையும் முதியோர் வாய் மூலமாகக் கேட்டு அறிந்து வைத்திருந்தனர். டைக் 1867 ஆம் ஆண்டு காலமானார். நாட்டார் வழக்காறாக அவரது பெயரும், புகழும் வாழ்க்கைச் சம்பவத்துணுக்குகளும், கதைகளும் பேசப்பட்டு சாதாரண மக்கள்  மனதில் பதிந்திருந்தன. ஆயினும் அண்மைக்காலத்து வளர்ச்சிகளும் மாற்றங்களும் பழைய கதைகளை மக்களின் நினைவில் இருந்து மங்கி மறையச் செய்துவிட்டன.  கடந்து போன ஒரு காலத்தின் கவர்ச்சி மிகு வீர புருஷனின் தனிப்பட்ட வரலாறு பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களைப் பெறுவது இப்போது கட

More ways to listen